ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.. சீமான் எச்சரிக்கை
நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபை தேர்தலையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டசபை தேர்தலையும் நடத்துவதற்கு தான் ஆதரவு தருவதாக அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கம் தேர்தலை நடத்த சரியான நேரம் எனவும், அந்த நேரத்தில் பள்ளிகளுக்கு தேர்வு, கோடை வெப்பம் மற்றும் மழை என எதுவும் இருக்காது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, நாடாளுமன்ற தேர்தலோடு, 20 மாநிலத் தேர்தலை நடத்துவதன் மூலம், தேர்தலுக்கான செலவும் அரசுக்கு குறையும். அந்த பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும் என தம்பிதுரை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். மேலும் நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேவையற்றது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications