பீரோ, நகைப்பெட்டி, வீட்டுப் பத்திரம்: சமந்தாவின் வீட்டில் எதையும் விட்டுவைக்காத ஐ.டி. அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறையினர் நடிகை சமந்தாவின் வீட்டில் இருந்த சொத்து பத்திரம் முதல் அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அவர் தற்போது கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சமந்தாவின் வீடுகளில் நேற்றும், இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

IT officials raid Samantha's house thoroughly

வருமான வரித்துறை அதிகாரிகள் சமந்தாவின் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். பீரோவில் இருந்த நகைப் பெட்டிகளை திறந்து பார்த்து ஆய்வு செய்துள்ளனர்.

வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். வீட்டில் இருந்த ஆவணங்கள் தொடர்பாக சமந்தாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று சமந்தாவின் வீட்டில் சோதனை நடந்தபோது அங்கு வந்த பத்திரிக்கையாளர்களை அவரின் தாய் திட்டி அனுப்பினார், சகோதரரோ அடிக்கப் பாய்ந்தார். ஆனால் அவரின் தந்தை பொறுமையாக நிலைமையை எடுத்துக் கூறினார்.

இன்று சமந்தாவின் வீடு மட்டுமல்லாமல் விஜய், நயன்தாரா ஆகியோரின் வீடுகளிலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+