தமிழகம், பெங்களூரில்.. மெட் ஆல் ரத்த பரிசோதனை கூடங்களில் ஐடி ரெய்டு
தமிழகத்தில் உள்ள மெட் ஆல் ரத்த பரிசோதனை கூடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை: தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள மெட் ஆல் ரத்த பரிசோதனை கூடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையடுத்து போயஸ் கார்டனிலும் சோதனை தொடர்ந்தது.

மேற்கண்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பட்டேல், மார்க், மிலன், கங்கா உள்ளிட்ட 4 குழுங்களுக்குச் சொந்தமான 33 இடங்களில் நேற்று வருமான வரித் துறை சோதனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மெட் ஆல் ரத்த பரிசோதனை நிலையங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள மெட் ஆல் மையங்களிலும் ரெய்டு நடக்கிறது.












Click it and Unblock the Notifications