சசிகலா உறவினர் வீடுகளில் நாளையும் சோதனை தொடரும்.. அதிகாரிகள் அறிவிப்பு
மிடாஸ் ஆலை உட்பட 12 இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலா உறவினர் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரிசோதனை நாளையும் தொடரும் என அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது மிடாஸ் உள்ளிட்ட 12 இடங்களில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை நடத்திக் கொண்டு இருக்கிறது. சசிகலா உறவினர்கள் சிலர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, ஸ்ரீ சாய் நிறுவனம், ஸ்ரீ சாய் கார்டன், இளவரசியின் மருமகனுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த சோதனை நாளையும் நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இன்னும் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் நாளை இன்னும் அதிக இடங்களில் சோதனை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications