மக்களே மெட்ரோ சுரங்க ரயிலில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாமாம்!
சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான மெட்ரோ சுரங்கப்பாதையில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான மெட்ரோ சுரங்கப்பாதையில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் சேவை இன்று தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை இன்று தொடங்கியது. இதனை முதல்வர் எடப்பாடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரூ.10 கட்டணம் ஆகும். அதிகப்பட்ச கட்டணம் ரூ.60 முதல் ரூ.70 வரை நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், சுரங்கப்பாதையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரூ.100க்கான பயண அட்டை வாங்கினால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றுதான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று கட்டணமின்றி இலவசமாக சுரங்க ரயிலில் பயணிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சுரங்க ரயில் சேவையின் முதல் நாள் என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications