அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்ககேடானது - ஜிகே.வாசன் 'பொளேர்'
தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்ககேடானது என ஜிகே.வாசன் சாடினார். மேலும் தற்போது பதவியில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும் ஜிகே.வாசன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பது வெட்கக்கேடானது என்றார்.

தற்போது பதவியில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும் ஜிகே.வாசன் தெரிவித்தார். மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறிய அவர், விவசாயிகள் தங்களுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறக்க முயற்சித்தால், பொதுமக்களுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்றும் ஜிகே.வாசன் தெரிவித்தார். மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் கேட்ட இடங்களை அதிமுக கொடுக்காததால் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டதாக கூறிய ஜிகே.வாசன், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications