நாலந்தரமாக தொடர்ந்து பேச்சு...எதிர்கால அரசியலுக்கு வந்த பேராபத்தாக 'புறம்போக்கு' புகழ் தீபா!
தொடர்ந்து அரசியல் மேடையில் நாகரீகமற்ற வார்த்தைகளை பேசி வரும் தீபா அணியினர் எதிர்கால அரசியலுக்கு வந்த பேராபத்தா என்று எண்ணத் தோன்றியுள்ளது.
சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அரசியலுக்கு வந்துள்ள ஜெ.தீபா தொடர்ந்து அரசியல் மேடையில் நாகரீகமற்ற முறையில் பேசி வருவதை அனைவரும் பேராபத்தாகவே கருதுகின்றனர்.
ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தை தொடர்வதற்காகவும், தொடர்ந்து மக்கள் பணியாற்றவும் அரசியல் பிரவேசம் எடுப்பதாக அவரின் அண்ணன் மகள் தீபா பிப்ரவரி 24ம் தேதி அறிவித்தார். இதனையடுத்து தனது பேரவைக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று பெயரிட்டு அறிவித்தார். தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் அதிமுக ஜெ.தீபா அணி எம்ஜிஅர் அம்மா தீபா பேரவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வழியில் அரசியல் நடத்த வந்த தீபா தொடர்ந்து நாகரீகமற்ற வார்த்தைகளைப் பேசி அரசியல் மேடையை நாறடித்து வருகிறார். கடந்த வாரம் போயஸ் கார்டனுக்கு சென்ற போது தனது சகோதரனால் விரட்டியடிக்கப்பட்டார் தீபா. அப்போது தீபக்கை தீபா பொதுஇடத்தில் வைத்தே எச்சக்கல, நல்லா இருக்க மாட்ட, பொய் சொல்லாதே, என் முகத்தலயே முழிக்காத என்றெல்லாம் வசைபாடினார். இதே போன்று சசிகாலவை புறம்போக்கு என்று மீடியாக்கள் மத்தியில் திட்டினார்.

முகம் சுளிக்கும் பேச்சுகள்
அந்தப் பேட்டியைக் கண்டவுடனேயே ஜெ.தீபாவின் அரசியல் பேச்சுகள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. எதிர் அணி அரசியல், கடுமையான விமர்சனங்கள் இருந்த போதும் தமிழக அரசியலில் இதுவரை நாகரீகமற்ற அணுகுமுறை என்பது இல்லாமல் இருந்தது.

வம்புக்கு இழுத்த சம்பத்
இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாகவே ஜெ.தீபா தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது குறித்து அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கிண்டல் செய்திருந்தார். யாரிடம் கையெழுத்து வாங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என்று தீபாவை வம்புக்கு இழுத்தார்.

விளக்கமாருக்கு பட்டுக்குஞ்சமா?
நாஞ்சில் சம்பத்தின் கருத்துக்கு அதிமுக ஜெ.தீபா அணி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செய்தித் தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு விளக்கு சிங்காரியாக வலம் வரும் ஆண் விலைமகன், விளக்கமாருக்கு பட்டுக்குஞ்சம் ஒரு கேடா? நாலாம்தர நரகல் பேச்சாளருக்கு நாஞ்சில் பட்டம் ஒரு கேடா என ஏக வசன நெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது அறிக்கை.

'புறம்போக்கு' சம்பத்தே என கண்டனம்
இளையபுரட்சித் தலைவி வாடாமல்லி தீபாவை சசிகலா,தினகரனிடம் வாங்கிய காசுக்காக விமர்சித்தது மக்கள் மத்தியல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தொளி சம்பத்தாய் கிளம்பி புறம்போக்கே நாஞ்சில் சம்பத்தாய் பச்சோந்தியாய் மாறிய அபல அனாதையே அடங்கிக்கொள் இல்லையேல் தமிழகத்தில் நீ எங்குமே மேடையேற முடியாது என்று நாஞ்சில் சம்பத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராபத்து
தீபா கோஷ்டியின் இந்த நரகல் ஏக வசனங்கள் தமிழக அரசியலின் நாகரீக அணுகுமுறைகளை குழிதோண்டி புதைத்து வருகிறது. இதுபோன்ற கும்பல் அரசியலில் நீடிப்பது தமிழக அரசியலுக்கே பேராபத்து என்பதுதான் நிதர்சனம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications