Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'டேமேஜான' பெயரை "டால்மியா சிமென்ட்" போட்டு அடைக்க சீனிவாசன் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் தனது ஆதரவாளரான ஜக்மோகன் டால்மியாவை போட்டியில் இறக்கி அவரைத் தலைவராக்க சீனிவாசன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது சிருங்கேரி சங்கராச்சாரியாரைப் பார்க்க சீனிவாசன் சிருங்கேரி போயுள்ளார். அங்கு போய் விட்டுத் திரும்பி வந்ததும் தனது முடிவை அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது.

சீனி கூடாது!

சீனி கூடாது!

ஐபிஎல் மேட்ச்பிக்ஸிங் வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட் அளித்த அதிரடியான தீர்ப்பைத் தொடர்ந்து சீனிவாசனால் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாது. காரணம், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருப்பதால்.

டால்மியாவை இறக்கு

டால்மியாவை இறக்கு

எனவே தனக்குச் சாதகமான ஜக்மோகன் டால்மியாவை தலைவராக்க சீனிவாசன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முதல்ல சிருங்கேரி

முதல்ல சிருங்கேரி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து சிருங்கேரி மடத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார் சீனிவாசன். 2 நாட்கள் கழித்துத்தான் அவர் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

தீர்ப்பால் அவர் நிலைகுலைந்து போகவில்லை என்று அவரது தரப்பு கூறுகிறது. சுப்ரீம் கோர்ட் தன்னை குற்றமற்றவன் என்று சொல்லி விட்டதை அவர் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளாராம். இப்போது தேர்தலில் மட்டுமே போட்டியிட தனக்கு தடை உள்ளதாக கருதும் சீனிவாசன், அது தனக்கு அவமானமானதாக இருக்காது என்றும் கருதுகிறாராம்.

வந்ததும் முடிவு

வந்ததும் முடிவு

எனவே தலைவர் பதவிக்கு அவர் தனது ஆதரவாளரான டால்மியாவை நிறுத்தி வெற்றி பெற வைக்க தீர்மானித்துள்ளாராம். சிருங்கேரியிலிருந்து வந்ததும் இதுதொடர்பாக அவர் முடிவெடுப்பார் என்கிறார்கள். சென்னை திரும்பியதும் அவர் கிரிக்கெட் வாரியக் கூட்டத்தையும் கூட்டவுள்ளார்.

டால்மியாவுக்கும் ஓ.கேதான்

டால்மியாவுக்கும் ஓ.கேதான்

டால்மியாவிடம் இதுதொடர்பாக ஏற்கனவே சீனிவாசன் பேசி விட்டதாக தெரிகிறது. அவரும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஜேட்லி என்ன சொல்வாரோ

ஜேட்லி என்ன சொல்வாரோ

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அருண் ஜேட்லி சீனிவாசனையும் சந்தித்துப் பேசி விட்டுச் சென்றுள்ளார். ஜெயலலிதாவைப் பார்த்துப் பேசிய பிறகு அவர் சீனிவாசனை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் அவர் டால்மியாவை ஆதரிப்பாரா என்பது தெரியவில்லை.

பேரை மாத்தியாச்சு

பேரை மாத்தியாச்சு

இதற்கிடையே, ஜனவரி 1ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், இந்தியா சிமெண்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் இனிமேல் இந்தியா சிமெண்ட்ஸ்தான். இதை காரணம் காட்டி சீனிவாசனை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளதா என்ற சட்ட ஆலோசனையும் ஒருபக்கம் முடுக்கி விடப்பட்டுள்ளதாம். இதுகுறித்து விரைவில் கோர்ட்டில் தெரிவிக்கவுள்ளார்களாம்.

ஆனால் கோர்ட் ஏத்துக்காதே

ஆனால் கோர்ட் ஏத்துக்காதே

ஆனால் புதிய நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமே வைத்துள்ளதால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்குமா என்பது தெரியவில்லை.

பாஸ் பதவியை விடுவதா.. நோ சான்ஸ்!

பாஸ் பதவியை விடுவதா.. நோ சான்ஸ்!

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்காக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பதவியை சீனிவாசன் கைவிடவும் வாய்ப்பில்லை. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கட்டுப்பாட்டு பங்குகளை அவர் யாருக்காவது விற்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தலைவர் பதவி சாத்தியமாகும். ஆனால் அது கூட அவ்வளவு உதவியாக இருக்காது என்றே சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+