தடையை மீறி தேனி, மதுரையில் ஜல்லிக்கட்டு, கோவையில் ரேக்ளா ரேஸ்
கோவை: கோவையில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடந்துள்ளது. மேலும் கூடலூர் மற்றும் பொதும்பு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டை போன்றே ரேக்ளா பந்தயத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரேக்ளா பந்தியத்தில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஈரோடு, கோவை மாவட்டங்களில் ரேக்ளா பந்தயம் மிகவும் பிரபலம். இந்நிலையில் கோவை மாவட்டம் எட்டிமலை பகுதியில் தடையை மீறி நேற்று ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த பந்தயத்தில் 50க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பந்தயம் நடத்தப்பட்டது. தடையை மீறி நடத்தப்பட்டாலும் பந்தயத்தை மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூடலூரில் 10 காளைகளும், பொதும்பு கிராமத்தில் 15 காளைகளைக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications