முந்தைய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட உங்களுக்கு ஓட்டு போடவில்லை.. வாசகரின் ஆதங்கம்
முந்தைய அரசுகள் செய்த தவறுகளை குறைகளை சுட்டிக்காட்ட மக்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என நமது வாசகர் ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விஷயத்தில் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்கள் முந்தைய அரசுகளை குற்றம்சாட்டி காலம் கடத்துவதை நமது வாசகர் ஒருவர் ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
என்.குருமூர்த்தி எனும் வாசகர் பகிர்ந்து கொண்ட தகவல் இதுதான்: தமிழகம் முழுவதும் வறட்சியால்,வறுமையால்,உலகத்துக்கே உணவளிக்கும் விவசாயிகள் தினம் தினம் சாகிறார்கள். அதை தடுக்க இயலாத, மத்திய, மாநில அரசாங்கம், விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டை தடுக்கிறதாம் (காளையை காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தது). விலை மதிப்பற்ற மனித உயிர் மீதே அக்கறையில்லாதவர்கள் விலங்குகள் மீது இவ்வளவு அக்கறையோடு செயல்பட காரணம் என்ன?

சுயமாக எது நல்லது எது கெட்டது என்று யோசிக்க தெரியாதவர்களா இவ்வளவு பெரிய நாட்டை வழி நடத்துவது. நாட்டில் தடுக்க வேண்டிய, காக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளது, ஆனால் அதை விடுத்து காக்க படவேண்டிய தமிழர் பாரம்பரியங்களை தடுக்க நினைக்கிறது அரசாங்கம்.
முந்தைய அரசுகள் செய்த தவறுகளை குறைகளை சுட்டிக்காட்ட மக்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. முந்தைய அரசுகள் செய்த தவறுகளை குறைகளை அவர்களை போலவே நீங்களும் செய்யக்கூடாது என்பதற்காக தான் உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் தவறு செய்திருந்தால் (காளையை காட்சி பட்டியலில் வைத்திருப்பது) அதை சரி செய்யவேண்டிய கடமை உங்களுக்கு உண்டு (சட்டத் திருத்தம்) என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. மக்கள் தந்த அதிகாரத்தையே வைத்து கொண்டு மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு நல்ல விஷயங்கள் நடைபெற தடையாக இருக்காதீர்கள்.
தடையில்லாமல் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க செய்வது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமையே தவிர மக்களை எதுவுமே செய்யவிடாமல் தடுப்பது அல்ல. இதையெல்லாம் பார்க்கும் பொழுது அன்று வெள்ளையர்கள் நாட்டிற்கு மட்டும் தான் சுதந்திரம் தந்திருக்கிறார்கள் இன்றளவும் நாமெல்லாம் (அரசாங்கம்) சுதந்திரமாக சுயமாக செயல்படமுடியாமல் அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக இருக்கிறோம் என்பது தெரிகிறது.
ஜாதி ,மதம் , இனம் , மொழி, இவைகளையெல்லாம் கடந்து மக்களின் ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.இதற்கு பிறகாவது மக்கள் இதை உணர்ந்தால் மட்டுமே இந்திய மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும்.இல்லை என்றால் அரசியல் கட்சியில் இருப்பவர்கள் போல, நாமும் நம் தலைமுறையும் அடிமைகளாக இருக்கவேண்டும் அப்படி இருக்க வேண்டுமா ?
-என்.குருமூர்த்தி
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications