தமிழகம் முழுவதும் மாணவர்களுடன் போலீஸ் பேச்சு - போராட்டத்தை கைவிட நிர்பந்தம்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் சில பகுதிகளில் வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். கோவை, மதுரையில் போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள்,இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை தொடங்கி நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது. அவசர சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து போராட்டம் 90 சதவிகிதம் வெற்றி பெற்று விட்டதாக கூறிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

Jallikattu supporters continue protest in Madurai, Coimbatore

இதனையடுத்து உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நெல்லை மாணவர்கள் அறிவித்தனர். ஆனால் பல பகுதிகளில் போராட்டம் விடிய விடிய நீடித்தது.

மெரீனா கடற்கரையில் காலையில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நீடித்து வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி, கும்பகோணம், திருத்தணியில் வாபஸ் பெறப்பட்டது. கோவை, திருச்சியில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்சியில் நீதிமன்றம் அருகே நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவை, பெரம்பலூர், திருச்சியில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கோவை வஉசி மைதானத்தில் போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி வருவதால் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. படுத்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+