கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்.. சீமான், அமீர் முயற்சிக்கு வெற்றி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: வாடிப்பட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டவர் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே 21 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 48 பேர் முன்னதாக விடுவிக்கப்பட்டனர். பின்னர் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மீதமுள்ள 157 பேர் மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்து தொடர் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் மிரட்டல்
இதனையடுத்து, அலங்காநல்லூரில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவர்கள் வழக்கு பதிவு செய்யப் போவதாக போலீசார் மிரட்டுவதாக கூறப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெற்றோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல்துறையினர் மிரட்டல் விடுத்தனர்.

மாணவர்கள் திட்டவட்டம்
வாடிப்பட்டி மற்றும் சோழவந்தானில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும் வரை வெளியே செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொடர் போராட்டம்
மேலும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அலங்காநல்லூர், பாலமேடு, கேட்டுகடை, தெத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமான் பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணர்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இளைஞர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications