ஜல்லிக்கட்டுக்குத் தடை: ஜன.17ல் மதுரையில் வைகோ உண்ணாவிரதம்
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஜனவரி 17ம் தேதியன்று மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் ஒத்தகடையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டுக்கு அடையாளமாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு, தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்ற கலாச்சார நிகழ்ச்சி ஆகும். 2011 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விலங்குகளைக் காட்சிப் பொருள் ஆக்குவதற்குத் தடை விதித்த பட்டியலில் காளைகளையும் சேர்த்தது மிகத் தவறான, கண்டனத்திற்குரிய நடவடிக்கை ஆகும்.

நாடு முழுவதிலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான காளைகள், பசுக்கள், எருமை மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் ஓட்டும்போது மாடுகள் மீது தார்க்குச்சிகளையும், குதிரைகள் மீது சவுக்குகளையும் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தமிழர்கள் தங்கள் வீடுகளில் செல்லப்பிள்ளைகளாகப் பாவித்து வளர்த்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போதும் காளைகளுக்கு எந்தவிதமான துன்புறுத்தலும் நடைபெறுவது இல்லை. சில வேளைகளில் மாடு பிடி வீரர்களுக்குத்தான் காயம் ஏற்படும்.
இந்த அடிப்படையை உணராமல் மத்திய அரசு தடையைக் கொண்டு வந்தது. இந்தத் தடையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசும் தவறி விட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் 48 உறுப்பினர்களைக் கொண்டு இருக்கின்ற அதிமுக கடந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டுத் தடையை நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவே இல்லை.
காளைகளை காட்டுப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்த போது திமுக மவுனம் காத்தது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் கொண்டு வராததால் விவசாயிகளுக்கு இது வேதனை பொங்கல் என தெரிவித்த வைகோ, ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஜனவரி 17ம் தேதி மதுரையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications