காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ5 கோடி உதவி: முதல்வர் ஜெ.அறிவிப்பு
சென்னை: கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
60 ஆண்டுகாலத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அந்த மாநிலமே ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதுவரை மொத்தம் 180 பேர் பலியாகி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அதனை தேசியப் பேரிடராக அறிவித்தார். அத்துடன் ரூ1000 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பகுதி இன்றுவரை தொடர்கிறது. வெள்ளத்தால் சிக்கியவர்களில் கடைசி மனிதனை மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என்று ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த உதவி வழங்கப்படுகிறது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications