கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டிய ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

கரூர்: கருரில் இன்று நடந்த அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அதிமுகவினரும், பொது மக்களும் அதிக அளவில் வந்ததால் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டியுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருான ஜெயலலிதா இன்று மதியம் ஒரு மணி அளவில் கரூர் ராயனூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

Jaya appreciates minister Senthil Balaji

முன்னதாக அவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கரூர் வந்தார். கரூரில் முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் வரவேற்றனர்.

அடுத்து மேடையில் பேசிய ஜெயலலிதா பாஜகவை ஒரு பிடிபிடித்தார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மேலும் ஜெயலலிதாவை காண பெண்கள் கூட்டம் அதிக அளவில் பஸ், வேன், கார் பிடித்து அதிக அளவில் வந்தனர்.

இதனால் மேடை ஏறும் முன்பு கூட்டத்தைப் பார்த்த ஜெயலலிதா வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக பேசினார். மேலும், அதிக அளவில் கூட்டத்தை கூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜியையும் அவர் பாராட்டியதாக கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+