அதிசயம் ஆனால் உண்மை, ஒரே தேதியில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஜெ.
சென்னை: ஜெயலலிதா இரண்டாவது முறையாக மே 23ம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதன் பிறகு அதே ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி தமிழக முதல்வராக 5வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் 5வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டு சரியாக ஓராண்டு கழித்த பிறகு அதே மே 23ம் தேதி 6வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் 1984ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ளது.
தமிழக மக்கள் திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து வந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் எளிமையாக நடைபெற்றது.
ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications