ஆளுநர் ரோசய்யாவுடன் முதல்வர் ஜெயலலிதா திடீர் சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் கே. ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா திடீரென சந்தித்து பேசினார்.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கூறியுள்ளதாவது:
''முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு ஆளுநர் முனைவர் கே.ரோசய்யாவை அவ்வப்போது மரியாதை நிமித்தம் சயதித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைப்பது வழக்கம்.
அந்த அடிப்படையில், முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முனைவர் கே. ரோசய்யாவை சந்தித்து, சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தனர்'' எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications