ஜெ. வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு செய்ய கூடாது: இல. கணேசன் பரபரப்பு பேட்டி
தஞ்சாவூர்: ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கூடாது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தெரிவித்தார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் கூட்டல் பிழை இருப்பதாக சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்தார். சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும் அவர் அரசுக்கு சிபாரிசு செய்துள்ளார்.
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன் கூறுகையில், "ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு மிகுந்த அக்கறை காட்டுவது ஏன் என்பது புரியவில்லை. இந்த வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய கூடாது.
ஹைகோர்ட் தீர்ப்பில் தவறு இருப்பது தெரியவந்தால், சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து (சுமூட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். அவ்வாறு விசாரித்துக்கொள்ளட்டும்" என்று இல.கணேசன் தெரிவித்தார்.