ஜெ. வழக்கில் தீர்ப்பு... தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் - பழ.நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழர் தேசிய முன்னணி கட்சியின் மாநிலத்தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்.

Jaya case verdict will change the political situation in Tamilnadu: Pazha. Nedumaran

ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப் பட்டுள்ள இத்தீர்ப்பு தொடர்பாக கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழர் தேசிய முன்னணி கட்சியின் மாநிலத் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று கருரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

முதல்வருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய தீர்ப்பு இதுவரை இந்திய வரலாற்றிலேயே அளிக்கப்படாதது, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி.

பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக அதிமுகவினர் நடத்தும் போராட்டங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையைக் கண்டிக்கிறேன்.

2 ஜி ஊழல் வழக்கு போன்ற வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்பு வரும்போதுதான் ஊழல் அரசியல்வாதிகளைப் பொது வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த முடியும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+