18ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம்.. ஜெ. அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. 6வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் ஜெயலலிதா. மீண்டும் முதல்வரான பின்னர் நாளை முதல் முறையாக டெல்லி செல்லவுள்ளார். பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.
இந்த நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டத்தை வருகிற 18ம் தேதி சென்னையில் கூட்டியுள்ளார் ஜெயலலிதா. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஜூன் 18ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல்வர் செயற்குழுக் கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.