மீனவர் கைதுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தரத் தீர்வு காண்க.. மோடிக்கு ஜெ. கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, துப்பாக்கியால் சுடப்படுவது ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கெனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 33 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பதற்கான மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்று மட்டும் 82 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுங்காலமாக தொடர்ந்து வரும் தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனையை தீர்க்க, நிரந்தர தீர்வுகான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications