சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தப்போ ஜெயா டிவிலேயும் ஜெயா பிளஸ்லேயும் என்ன போச்சு தெரியுமா?
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்வு வழங்கிய போது அதிமுக ஆதரவு டிவி சேனல்களில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
சென்னை: சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அப்போது ஜெயல குரூப் தொலைக்காட்சிகளில் கைராசி குடும்பம் சீரியலும், எம்ஜிஆர் பாடல்களும் ஒளிப்பரப்பட்டன.
ஒட்டு மொத்த இந்தியாவும் பரபரப்பாக எதிர்ப்பார்த்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது. இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தனர்.

தீர்பை கண்டுகொள்ளாத ஜெயா சேனல்கள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தீர்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டன. அப்போது அதிமுக ஆதரவு டிவி சேனல்களான ஜெயா டிவி குரூப் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்பாட்டுக்கு வேலை செய்தது.

சசியின் பேச்சு ரீடெலிகாஸ்ட்
ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.ஜெயா பிளஸ் தொலைக்காட்சி எதையும் கண்டுகொள்ளாமல் சசி நேற்று பேசியதையே திருப்பி திருப்பி ஒளிப்பரப்பியது.

சீரியல் பக்கம் திரும்பிய ஜெயா டிவி
ஜெயா டிவி கொஞ்சமும் அசராமல் கைராசி குடும்பம் சீரியலை டெலிகாஸ்ட் செய்தது. அதேபோல் அவர்களின் மியூசிக் சேனலான ஜெயா மேக்ஸ் எம்ஜிஆர் பாடல்களை ஒளிப்பரப்பியது.

தீர்ப்பு செய்தியே இல்லையே
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து ஜெயா குரூப் தொலைக்காட்சிகளில் ஒரு வரிக்கூட செய்தி போடாமல் இருந்தது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications