அப்பல்லோவில் இருந்து இன்று வீடு திரும்புகிறார் ஜெ.,?: தொண்டர்கள் உற்சாகம்
சென்னை : உடல்நலக்குறைவினால் கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, இன்று வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவ மனையில் கடந்த 22ம் தேதி நள்ளிர வில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. இதையடுத்து அவருக்கு அன்றைய தினமும், மறுநாள் 23ம் தேதி அன்றும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து முதல்வர் வழக்கமான உணவுகளை சாப்பிடத் தொடங்கினார். தொடர்ந்து முதல்வர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சமூக வலைத் தளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவின. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் தொடர்ந்து கோவில்களில் பிராத்தனை, சிறப்பு யாகங்கள் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவர்கள், சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அடிப்படை ஆதாரமற்றவை. முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. மருத்துவ சிகிச்சைகளை முதல்வர் நல்ல முறையில் ஏற்று வருகிறார்.
முதல்வர் பூரண நலம் பெற இன் னும் சில தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டுமென்று அறி வுறுத்தி இருக்கிறோம். எனவே, இன்னும் சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ஞாயிறு மாலையில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதால் அதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை முதல் ஆரம்பித்து விட்டது. போயஸ் தோட்டத்தில் அவர் ஓய்வு எடுக்க சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளனர். இன்று எந்த நேரமும் அவர் மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்ட வீட்டிற்குத் திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications