முகம் முழுக்க பெயிண்ட் அடித்த வித்தியாசத் தொண்டர்கள்.. கூப்பிட்டு கிப்ட் கொடுத்த ஜெ.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டு போயஸ் தோட்டம் திரும்பிய ஜெயலலிதா. தம்மை வித்தியாசமாக வரவேற்ற தொண்டர்களை வீட்டுக்கு அழைத்து குரூப் போட்டோ எடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறார்.

தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் முகாமிட்டு இருந்தனர்.

Jaya met ADMK cadres

இன்று காலை ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டு போயஸ் தோட்டத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போயஸ் கார்டன் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை அதிமுக தொண்டர்கள் 15 பேர் அனைவரையும் கவரும் வகையில் உடல்களில் அ.தி.மு.க. கொடி வண்ணத்தை பூசியபடி வித்தியாசமாக நின்று ஜெயலலிதாவை வரவேற்றனர்.

Jaya met ADMK cadres

இதை அந்த வழியாக கடந்து சென்ற ஜெயலலிதா பார்த்தார். பின்னர் வீட்டுக்கு சென்றதும் அந்த தொண்டர்களை அழைத்து வரும்படி ஜெயலலிதா கூறினார்.

போயஸ் தோட்டத்துக்குள் சென்ற தொண்டர்களிடம் முதல்வர் ஜெயலலிதா சிறிது நேரம் பேசிவிட்டு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு ஒரு கவரில் பண பரிசு கொடுத்தும் அனுப்பினாராம்..

Jaya met ADMK cadres

ஜெயலலிதாவின் எதிர்பாராத இந்த நடவடிக்கையால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளனர்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+