தமிழக சட்டத்துறை செயலாளர் திடீர் நீக்கம்!
சென்னை: தமிழக சட்டத்துறை செயலாளர் ஜெயச்சந்திரன் திடீர் என அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறையில் இருந்த ஜெயச்சந்திரன் தமிழக சட்டத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் அந்த பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் திடீர் என்று அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் நீதித்துறைக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரை திருவள்ளூர் மாவட்ட நீதிபதியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் சட்டத்துறை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் நீக்கப்பட்டதை அடுத்து சட்டத்துறை செயலாளர் பதவி காலியானது. அந்த பதவிக்கு சட்டத்துறையின் கூடுதல் செயலாளரான எஸ்.எஸ். பூவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பிசியாக உள்ள நிலையிலும் சட்டத்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications