ராஜீவ் வழக்கில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது: ஹைகோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று தற்போதைய நிலைப்பாட்டைத் தமிழக அரசு புதிய மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு மறுப்பு
இந்த வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸை விடுவிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனுத்தாக்கல் செய்தது. மேலும், ஆயுள் தண்டனை என்பதே வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான். எனவே, இவர்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது தான் என்று மத்திய அரசு தெரிவித்தது.
2012ல் நிலைப்பாடு
இதேப் போன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று திட்டவட்டமாக தமிழக அரசு கூறியுள்ளது. 2012ம் ஆண்டு உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபாலன் பெயரிலேயே பதில் மனுவைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்தது.
புதிய மனு
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று தற்போதைய நிலைப்பாட்டைத் தமிழக அரசு புதிய மனுவாகத் தாக்கல் செய்துள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications