ஏற்காடு இடைத்தேர்தல்: சரோஜாவிற்கு ஆதரவாக இரண்டு நாள் பிரசாரம் செய்யும் ஜெ.,

ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல், டிச., 4ம் தேதி நடக்கிறது. மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜா, அ.தி.மு.க., வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், மாறன் என்ற புதுமுகம் நிறுத்தப்பட்டுள்ளார். வேறு எந்த கட்சியும் வேட்பாளர் அறிவிக்காததால், இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., வேட்பாளர் மாறன், கடந்த, 9ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, நாளை, 13ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட, 62 தேர்தல் பொறுப்பாளர்களும், நாளை ஏற்காடு வருகின்றனர்.
சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று மாலை நடப்பதால், அதை முடித்துக்கொண்டு, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அவசர அவசரமாக, ஏற்காடு செல்கின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முதல்வர் ஜெயலலிதா, ஏற்காட்டில், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். அநேகமாக, 'வரும், 25, 26 ஆகிய தேதிகளில், ஜெயலலிதா பிரசாரம் செய்வார்' என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தி.மு.க., வேட்பாளர், மாறனை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் கருணாநிதி, டிசம்பர், 1ம் தேதி, ஏற்காட்டில்
பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications