ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாருங்க.. அசராமல் பேசும் சி.ஆர்.சரஸ்வதி
ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டது உண்மைதான் என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டது உண்மைதான் என்றும் மருத்துவர்கள் கூறியதைத்தான் நாங்கள் கூறினோம் என்றும் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறி வந்தனர்.

இட்லி சாப்பிட்டார்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், இனிப்பு சாப்பிட்டார் என்று கூறியது பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதனால் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன.

விசாரணை கமிஷன் அறிக்கை
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இதனிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் அவரது சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவை அதிகரித்ததாகவும் தனியார் தொலைகாட்சி நடத்திய களஆய்வில் தெரியவந்தது.

இட்லி சாப்பிட்டது உண்மை
இந்நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறுகையில் அப்பல்லோவில் ஜெயலலிதா உடல் நலமடைந்த பின்னர் இட்லி சாப்பிட்டது உண்மை. ஜெயலலிதா உடல்நிலை பற்றி மருத்துவர்கள் சொன்னதையே நான் ஊடகங்களுக்கு தெரிவித்தேன்.

கடந்த ஓராண்டாக...
ஜெயலலிதா மரணம் குறித்து வதந்திகளுக்கு நீதி விசாரணை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் அவர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஓராண்டாக மோசமான உடல்நிலையில் இருந்தார் என்றும் அவர் இறுதி கட்டத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications