தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிக்காமல் அடக்கி வாசித்த ஜெ..
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா, தனது பிரசாரத்தில், எதிர்கட்சிகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளையும் ஒரு பிடி, பிடிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர், தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ் என, எந்த கட்சியையும், கட்சித் தலைவர்களையும் விமர்சிக்கவில்லை.

தன்னை எதிர்த்து போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைக் கூட விமர்சிக்காமல், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தன்னை பாராட்டி பேசியதை மட்டும் சுட்டிக்காட்டினார்.
அதே நேரம், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை மட்டும் பட்டியலிட்டு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

ஜெயலலிதாவின் இந்த பிரச்சாரம் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, ஆர்.கே.நகர் தொகுதி மக்களையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications