வரலாறு காணாத வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு... போன் செய்து ‘நன்றி’ சொல்லும் அம்மா!
சென்னை: லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை சாத்தியமாக்கிய தமிழக வாக்காளர்களுக்கு செல்போன் வாயிலாக நன்றி அறிவிப்பு செய்து வருகிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
16வது லோக்சபா தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 24ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு உழைத்தது அதிமுக. அதற்கு வசதியாக தொழில்நுட்பத்தை பிரச்சாரத்திற்காக தனது கையில் எடுத்தது.

செல்போன் பிரச்சாரம்...
அதன்படி, வாக்காளர்களின் செல்போனில் ஜெயலலிதாவின் பிரச்சாரம் அழைப்புகளாகவும், எஸ்.எம்.எஸ்.களாகவும் வந்தது.

செய்வீர்களா...
அந்த அழைப்பில், ‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கும், அமைதி, வளம், வளர்ச்சிக்கும் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். செய்வீர்களா..., நீங்கள் செய்வீர்களா...? என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல் பதிவு செய்யப் பட்டிருந்தது.

வெற்றி...
அதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வெள்ளியன்று எண்ணப் பட்டன. அதன்படி, அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நன்றி அறிவிப்பு....
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் ஏராளமான செல்போன்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு அழைப்பு வர ஆரம்பித்தது.

இதயங்கனிந்த நன்றி...
அந்த குரல் பதிவில் முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு வழங்கி உள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய ஒரு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்'' எனத் தெரிவிக்கிறார்.

வாட்ஸ் அப் மூலமாகவும்...
செல்போன் அழைப்புகளாக மட்டுமல்லாமல் எஸ்.எம்.எஸ் மற்றும் ‘வாட்ஸ் அப்' மூலமும் இதுபோன்ற நன்றி அறிவிப்பு பல லட்சம் மக்களைச் சென்று சேர்ந்துள்ளதாம்.

அம்மாவே நேரடியா பேசுறாங்க....
இத்தகைய நன்றி அறிவிப்புகளைக் கேட்டவர்கள் முதல்வரே தங்களுக்கு நேரடியாக நன்றி தெரிவித்துள்ளதாக குதூகலித்து வருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications