எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள்: 24ம்தேதி நினைவிடத்தில் ஜெயலலிதா மலர் அஞ்சலி
சென்னை: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாளான 24ம் தேதி முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்ககள், கழக நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு தினத்தின் போது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்திருந்தார். ஜாமீனில் வெளிவந்து சென்னையில் இருந்த போதும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. போயஸ்கார்டன் இல்லத்திலேயே எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக உருவான தினமான அக்டோபர் 17ம் தேதி கட்சியினரை சந்திக்க தலைமைக்கழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோடநாட்டிற்கு சென்ற ஜெயலலிதா, அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களையும், அதிமுகவினரையும் முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்திக்கப் போகிறார் .
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications