ஜெயலலிதாவின் ஆசிரியை கேத்தரின் சைமன் மரணம்.. ஜெ. இரங்கல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிரியை கேத்தரின் சைமன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளா்.
முதல்வர் ஜெயலலிதா தனது பள்ளிப் படிப்பில் ஒரு பகுதியாக சென்னை சேக்ரட் ஹார்ட் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு ஆசிரியையாக இருந்த கேத்தரின் சைமன் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
சர்ச் பார்க் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய ஆசிரியை கேத்தரின் சைமன் மரணமடைந்தார் என்ற தகவலை அறிந்து துயருற்றேன். ஆசிரியை கேத்தரின் சைமன் நான் 1958-64ம் ஆண்டு மாணவியாக இருந்தபோது எனக்கு ஆசிரியையாக இருந்தவர்.
ஆசிரியை -மாணவி என்ற முறையில் எங்களுக்குள் நல்லுறவு இருந்தது. மாணவர்கள் பலருக்கும் அவர் உத்வேதமாக விளங்கினார். எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்தரின் சைமன்.
அவரது கருணை, உறுதியான நிலைப்பாடு பல இளைஞர்களை பொறுப்புள்ள குடிமக்களாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.