இலங்கை சிறையில் 15 தமிழக மீனவர்கள்.. 53 படகுகளையும் விடுவிக்க கோரி மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 15 தமிழக மீனவர்களையும், 53 படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நவம்பர் 25ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல 26ம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தங்களின் தலியீடு அவசியமாகிறது. இந்தப் பிரச்னையை மேலும் கிடப்பில் போட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
எனவே உடனடியாக இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு 15 மீனவர்களையும், அவர்கள் வசம் உள்ள 53 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேணடும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications