ஜெயலலிதா வெற்றியை மொட்டை போட்டு கொண்டாடிய போலீஸ்
தேனி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து தேனியில் அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் மொட்டை போட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. இந்த வெற்றியை தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை கொடுத்தும் அதிமுகவினர் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் நிலையில், தேனியில் ஏராளமான அதிமுகவினர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஜெயலலிதா பெற்ற வெற்றிக்காக, சீருடையில் மொட்டை அடிக்கும் ஒரு அடிமை.....ராமானுஜம், அடிமையாகும்போது, அந்த உரிமை காவலருக்கு இல்லையா என்ன ?
Posted by Shankar Savukku onTuesday, June 30, 2015
அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் மொட்டைப் போட்டுக்கொண்டார். இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அவரது பெயர் வேல்முருகன். இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று இத்தனை நாளாக விரதம் இருந்த நேரு சிலை அருகில் மொட்டை போட்டு தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.
வேல்முருகனின் விரதம் இதோடு முடியவில்லையாம். பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதா பிறந்த நாளில், மிக அதிக எடையுள்ள வாகனத்தை தன்மீது ஏற்றி சாதனை புரிய உள்ளாராம்.
ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சேலம் மாநகரக் காவல்துறையின் மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் கணேசன், காலில் அடிபட்டதாகக் கூறி 10 நாட்கள் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார். அவர் கட்சி கரை வேஷ்டி கட்டிகொண்டு பணியாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications