தராசு முள் போல் சபாநாயகர் செயல்படுவார்: முதல்வர் ஜெ., வாழ்த்து
சென்னை: சட்டசபை சபாநாயகர் தராசு முள் போல தொடர்ந்து செயல்படுவார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
15வது சட்டசபையின் தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தனபால் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தி பேசினார்.

தமிழக சட்டசபையில் சபாநாயகர்களாக பதவி வகித்தவர்களைப் பற்றியும், அவர்களின் மாண்புகளை, பெருமைகளைப் பற்றியும் போற்றி பேசிய ஜெயலலிதா, தொடர்ந்து இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்வு பெற்ற தனபாலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல் செயல்பட வேண்டும். ஒருபக்கம் சிதைந்து போனால் கூட நாணயம் செல்லாதது ஆகிவிடும் என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரிலும், அண்ணாவின் உருவத்தை கொடியிலும் தாங்கியுள்ள கட்சி அதிமுக என்று கூறினார்.
அண்ணாவின் கொள்கையை காப்பாற்ற நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்று கூறிய ஜெயலலிதா, அதேபோல எதிர்கட்சியினரும் சபையின் மாண்புகளை உணர்ந்து தங்களின் கடமைகள், பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் முதன்முறையாக வேறு எந்த கட்சிகளும் இல்லாத அளவிற்கு அதிமுக, திமுக மட்டுமே அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்டுள்ளது. மக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமாக விவாதங்களை முன்வைக்க வேண்டும்.
சட்டசபையில் அனல் பறக்கும் விவாதங்கள், காரசார விவாதங்கள் நடைபெற்றாலும், அவையில் சூடு பறந்தாலும், அதை திறமையுடன் சமாளிப்பதில் வல்லவர் சபாநாயகர் தனபால் என்று புகழாரம் சூட்டினார் ஜெயலலிதா.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வகித்த பதவிகளை பட்டியலிட்ட ஜெயலலிதா, அவரும் இரண்டாவது முறையாக துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தனது வாழ்த்துக்களை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
என்னை 6 வது முறையாக முதல்வராக முதல்வராக தேர்வு செய்த மக்களுக்கும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கும் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த தமிழக மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications