மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட சிறையில் உள்ள மொத்தம் 37 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசிடம் வெளியுறவுத்துறை மூலம் வலியுறுத்த உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்கை வசம் உள்ள 55 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், கடந்த 8ம் தேதி இலங்கை கடற்பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்து கரை ஒதுங்கிய 4 தமிழக மீனவர்களையும் திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படும் மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் திருப்பி அளிக்கப்படுவதில்லை என்பதை தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாகவும், இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு வெளியுறவுத்துறை மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications