ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை
-கர்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பேருந்துகளும் ரத்து
-பல மாவட்டங்களில் வெளியூர் செல்லும் பேருந்துகள் அடியோடு நிறுத்தம்
-நெல்லை மாவட்டத்தில் அனைத்து வெளியூர்ப் பேருந்துகளும் நிறுத்தம்
-பெங்களூர் செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தம்
-சென்னையில் மீண்டும் பதட்டம்- கடைகள் அடைக்கப்படுவதால் மக்கள் பீதி
-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
-மாநில சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ், முதல்வர் சித்தராமையாவுக்கு நேரில் விளக்கம்
-ஜாமீன் மறுப்பு தீர்ப்பை டி.வியில் பார்த்து ஜெயலலிதா மயங்கி விழுந்தார்
-சிகிச்சை அளிக்க சிறை மருத்துவர்கள் விரைந்தனர்
-அவசரமாக ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை- கர்நாடக உயர்நீதிமன்றம்
-நாளை உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு கோரி மனு தாக்கல்
-ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை- நீதிபதி
-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபணை இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியும் ஜாமீன் கிடைக்கவில்லை
-சசிகலா, சுதாகரன், இளவரசிக்கும் ஜாமீன் இல்லை
-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் இல்லை- கர்நாடக உயர் நீதிமன்றம்
-தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு
-தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு
-முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின
-நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது
-ஜெ. உட்பட நால்வர் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்தது
-ஜாமீன் அளிக்க எதிர்ப்பு இல்லை என்று நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பவானிசிங் கருத்து தெரிவிப்பு
-ஜெ. சார்பில் ராம் ஜெத்மலானி சில விளக்கங்களை அளித்த பிறகு இளவரசி தரப்பு வாதம் தொடக்கம்
-இளவரசி வக்கீல் அஷ்மத் பாஷா வாதத்தை தொடங்கினார்
-வளர்ப்பு மகன் திருமணத்திற்கான செலவை ஜெயலலிதா ஏற்கவில்லை-ஜெத்மலானி
-பெண் வீட்டார்தான் திருமணச் செலவை ஏற்றனர்-ஜெத்மலானி வாதம்
-ஜெயலலிதாவுக்காக மீண்டும் ராம் ஜெத்மலானி வாதம் ஆரம்பம்
-வளர்ப்பு மகன் திருமண விவகாரம் குறித்து ஜெத்மலானி வாதம் செய்து வருகிறார்
-உணவு இடைவேளைக்கு பிறகு ஜெ. உள்ளிட்ட நால்வர் மீதான ஜாமீன் மனு விசாரணை துவக்கம்
-மதியம் 2.35 மணிக்கு ஜாமீன் மனு விசாரணை மீண்டும் துவக்கம்
-இளவரசி தரப்பு வக்கீல் தனது வாதத்தை எடுத்து வைக்க உள்ளார்
-ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனு - விசாரணை மீண்டும் தொடர்கிறது
-மதியம் 2.30 மணிக்கு வாதத்தை ஒத்தி வைத்தது ஹைகோர்ட்
-மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் வாதம் செய்து வருகிறார்
-ஒரு மணிநேரம் நடந்த ஜெயலலிதா ஜாமீன் மனு விவாதம்
-சென்னையில் கன்னடர்களை மிரட்டும் வகையில் அதிமுகவினர் போஸ்டர் வைத்த சம்பவம் எதிரொலி
-சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை போனில் தொடர்புகொண்ட பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி
-கன்னடர்களுக்கு பாதுகாப்பு தருமாறு ஜார்ஜிடம் கேட்டுக்கொண்ட எம்.என்.ரெட்டி
-ஜெயலலிதாவிடமுள்ள நகைகள் 1971ம் ஆண்டில் பெற்றோரிடமிருந்து வந்தது
-குடும்ப நகை என்ற வாதத்தை சிறப்பு நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை-ஜெத்மலானி வாதம்
-ஜெயலலிதா சட்டத்தை மதிக்கும் பெண்மணி, கோர்ட் கூறியபோதெல்லாம் நேரில் ஆஜராகியுள்ளார்-ஜெத்மலானி
-ஜெயலலிதாவின் உடல் நலம் சரியில்லை என்பதையும் பரிசீலித்து ஜாமீன் வழங்க வேண்டும்
-லில்லிதாமஸ், ரவி பாட்டீல் வழக்குகளில் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கிய உதாரணம் உள்ளது-ஜெத்மலானி
-லாலு பிரசாத் வழக்கை மேற்கோள் காட்டி வாதிட்ட ராம்ஜேத்மலானி
-5 ஆண்டு தண்டனை பெற்ற லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
-அதேபோல ஜெயலலிதாவையும் விடுவிக்க ராம்ஜேத்மலானி கோரிக்கை
-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு மீதான ராம் ஜெத்மலானியின் வாதம் நிறைவு
-சசிகலா ஜாமீன் மனு வாதம் தொடங்கியது
-ராம்ஜேத்மலானி வாதம் முடிந்தது - பவானி சிங் வாதம் தொடங்கியது
-ஜாமீன் வழக்கு விசாரணை நடைபெறும் கர்நாடக ஹைகோர்ட் ஹாலுக்குள் அதிமுகவினர் கூச்சல், குழப்பம்
-அதிமுகவினர் கூச்சலால் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி சந்திரசேகர் கோபம்
-வழக்கிற்கு தேவையற்றவர்களை வெளியே அனுப்ப நீதிபதி உத்தரவு
-தண்டனையை ரத்து செய்ய கோரும் விசாரணை தாமதம் ஆகும் என்பதால் ஜாமீன் தர வேண்டும்- ஜெத்மலானி
-ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா எங்கும் தலைமறைவாகிவிட மாட்டார்- ஜேத்மலானி
-4 வருட தண்டனை என்பதால் அரசுக் கருத்தைக் கேட்கத் தேவையில்லை
-அரசுத் தரப்பு கருத்தைக் கேட்காமலேயே ஜாமீனில் விடுவிக்கலாம்- ராம்ஜேத்மலானி வாதம்
-ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் பவானிசிங் எதிர்ப்பு
-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
-ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும், அடுத்தகட்ட விசாரணை அங்கே நடக்க வேண்டும்
-கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரிடம் கர்நாடக சட்ட பாதுகாப்பு கமிட்டி சார்பில் மனு தாக்கல்
-கர்நாடகாவில் அதிமுகவினரால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதால் ஹைகோர்ட் தலையிட கோரிக்கை
-ஜெயலலிதா வழக்கை அவசர வழக்காக எடுக்க முடியாது
-வரிசைப்படியே விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவிப்பு
-ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்
-ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் முடிவு
-நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மூத்த வக்கீல் தர்மபால் தலைமையிலான வக்கீல்கள் குழு தயார்
-நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்து கர்நாடக அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்கிறது வக்கீல் குழு
-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
-சிறை வளாகத்தில் குவிந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தொண்டர்கள்
-சிறை வளாகத்தில் 1500 போலீசார் குவிப்பு
-காலையிலேயே ஜாமீன் மனு விசாரணையை எடுக்க கோரிக்கைவிடுக்க ஜெயலலிதா வக்கீல்கள் முடிவு
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications