சேலம் பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி- ஜெ. இரங்கல்- தேர்தலுக்கு பின் நிதி உதவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் மகுடஞ்சாவடி பிரசார கூட்டத்தில் வெயிலில் சுருண்டு விழுந்து பலியான 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் 2 பேரின் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

விருத்தாசலத்தில் ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். அப்போது அறிக்கை விட்ட ஜெயலலிதா, 2 பேரும் உடல்நலக் குறைவால் இறந்ததாக தெரிவித்திருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

jayalalithaa

இதனைத் தொடர்ந்து சேலம் அருகே மகுடஞ்சாவடியில் புதன்கிழமையன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் பெரியசாமி, பச்சையண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, பிரசார கூட்டத்தில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் 2 அதிமுக தொண்டர்களின் குடும்பத்துக்கும் தேர்தல் முடிந்த பிறகு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+