பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு நன்றி கூறிய ஜெயலலிதா, இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் ஜெமினி பாலத்தின் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஜெயலலிதா, ஸ்பென்சர் வணிகவளாகம் அருகேயுள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று மாலை நடைபெறவுள்ள அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications