'அம்மா உப்பு': மலிவு விலை விற்பனையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூன்று வகையான, மலிவு விலை உப்பு பாக்கெட் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் தொழில் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில், தயாரிக்கப்பட்டுள்ள மூன்று வகையான உப்புகளை, முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவற்றை மலிவு விலையில், அமுதம், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு கடைகள் மூலம் விற்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, மற்றும் குறைந்த அளவு சோடியம் உப்பு ஆகிய மூன்று வகை உப்புகள் மலிவு விலையில் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications