சிறுமி தேவி மரணத்திற்கு ஜெ. இரங்கல்… ரூ.1 லட்சம் நிதி
சென்னை: திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி தேவியின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புலவன்பாடி கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில், 28.9.2013 அன்று தவறி விழுந்து மீட்கப்பட்ட புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் நான்கு வயது மகள் சிறுமி தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி தேவியின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி தேவியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications