நல்ல தீர்ப்பு... குடும்ப ஆட்சி கொண்டு வர நினைத்தவர்களுக்கு முடிவு- ஜெ.தீபா
நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் இப்போது செல்லப்போகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளளார். இந்திய நீதித்துறை சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் தலைமையை பிடிக்காதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்களாக மாறினார்கள். தீபா வீட்டில் தினசரியும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். தீபா கடந்த 2 மாதங்களாகவே ஊடகங்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார். தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் பேசி அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார்.

தனது அரசியல் பயணத்தை கடந்த மாதம் 17ஆம்தேதி தொடங்கினார். புதிய கட்சி தொடங்குவதா? அல்லது அ.தி.மு.க.வில் சேருவதா? என்பதை வருகிற 24ஆம்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அறிவிக்கப் போவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக் ப்பட்டதால் தீபா வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்போது தீபா பால்கனிக்கு வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் சென்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, நீண்ட நாட்கள் கழித்து இந்த நல்ல தீர்ப்பு வந்து உள்ளது. சசிகலாவுக்கு வழங்கபட்ட தீர்ப்பை வரவேற்கிறேன். என்றார். இந்திய நீதித்துறை மிகமுக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. இதேபோல ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் மீதான நீக்க நடவடிக்கை கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் உள்ளது என்பதை காட்டுகிறது. ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்.ஆனால் ஆதரவு குறித்து பின்னர் முடிவு எடுப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications