எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா.. அரசியல் எதிராளி இன்றி தனித்து விடப்பட்ட கருணாநிதி.. உருவான வெற்றிடம்
கருணாநிதிக்கு இருந்த ஒரே அரசியல் போட்டியாளரான ஜெயலலிதாவும் இப்போது இல்லை என்பதால் தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசியலில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருந்த இரண்டாவது அரசியல் போட்டியாளரும் இப்போது இல்லை. இதனால் கருணாநிதிக்கு, ஈடுகொடுக்கும் போட்டியாளர் இல்லாமல் தமிழக அரசியல் வெறுமையடைந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியும், எம்ஜிஆரும் நண்பர்களாக இருந்த நிலையில், திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறி அதிமுகவை தொடங்கியது முதல் கருணாநிதியின் அரசியல் எதிராளியாக மாறினார் எம்ஜிஆர். அவர் உயிரோடு இருந்த காலம்வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

இந்த நிலையில், எம்ஜிஆர் 1987ல் மறைந்ததும், 1989ல் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்து திமுகவிடம் வீழ்ந்தது. எனவே கருணாநிதிக்கு அரசியலில் எதிராளி இல்லை என்றுதான் திமுகவில் பேச்சு எழுந்தது. ஆனால், 1991ல் விஸ்வரூபம் எடுத்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு மிகப்பெரிய போட்டியாளராக மாறினார்.
இரு கட்சிகளும் தலா 5 வருடங்கள் என ஆட்சி செய்ய தொடங்கின. இவ்வாண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு, அதிமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்தது என்ற சாதனையை நிலைநாட்டினார் ஜெயலலிதா.
இதனால் கருணாநிதி பக்கம் மிகவும் பின்னடைவை சந்தித்தது.
இப்போது ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், போட்டியாளர் இல்லாத நிலையில் உள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. போட்டியாளரின் தகுதிதான், எதிர்த்து நிற்பவரின் தகுதியையும் தீர்மானிக்கும். அந்த வகையில் கருணாநிதிக்கு பெருமை சேர்த்ததே எதிரே நின்ற போட்டியாளர்கள்தான் என்றால் அது மிகையில்லை. எனவேதான், கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், "ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருந்தால் அதோடு கருணாநிதியின் பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications