ஜெயலலிதா சென்ற ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும்படை
கோவை: கோவையில் பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் காரையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் பிரச்சாரம் செய்ய முதல்வர் ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டர், கார் மற்றும் அவருடன் செல்லும் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய நேற்று மதியம் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய அவர் கார் மூலம் பிரச்சார கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றார். இந்நிலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ் ஆகியோர் ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்தனர். சுமார் 10 நிமிடம் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து தாசில்தார் சண்முகராஜ் கூறுகையில்,
ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சி வாகனங்களையும் சோதனை செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை சோதனை செய்தோம். அதில் எந்த பொருளும் கிடைக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications