ஜெ., வசித்த வீடு நினைவுச் சின்னமாகுமா?- அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு சின்னமாக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம்தேதி எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அவர் பதவியேற்று நூறு நாட்கள் நிறைவடைய உள்ளது. இதுவரை அவர் மூன்று தடவை தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். நான்காவது முறையாக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அரசுக்கு போதாத காலம்தான். கட்சி உடைந்தது ஒரு பக்கம் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் எம்எல்ஏக்களின் நெருக்கடியால் ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதிருப்தியில் எம்எல்ஏக்கள்
கடந்த 23ஆம் தேதி பத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். இதனால் மீண்டும் அதிமுகவில் அதிருப்தி நிலவுகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் அணி அணியாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அமைச்சரவைக் கூட்டம்
இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் நிலவும் பிரச்சனை குறித்து பேசப்படாது எனவும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும்.

முக்கிய ஆலோசனைகள்
பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளிப்பது குறித்தும், வீட்டு மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பை 25 சதவீதம் குறைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெயலலிதா வீடு
ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவது, சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களின் விருப்பம்
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடமையாக்கி அதை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மூலம் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது. எனவே இன்றைய கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications