ஸ்ரீராம் சிட்பண்ட்-ல் நாமினி என்பதாலே ஜெ.வின் அரசியல் வாரிசும் சசிகலாதான்: பொன்னையன்

ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் நிதி சேமிப்பு வாரிசுதாரராக சசிகலாவை ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்; ஆகையால் சசிகலாவே ஜெயலலிதாவின் வாரிசு என்கிறார் பொன்னையன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த போது தமது நிதி சேமிப்பு வாரிசாக சசிகலாவை ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்; ஆகையால் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசும் சசிகலாதான் என பொன்னையன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க சசிகலா முயற்சித்து வருகிறார். ஆனால் அதிமுக தொண்டர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

Jayalalithaa's political heir Sasikala only, says Ponnaiyan

பொன்னையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவை, பெரியம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அழைத்து வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவற்றை அதிமுக தொண்டர்கள் கிழித்து எறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், 1991-ம் ஆண்டு ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் ஜெயலலிதா ரூ7 லட்சம் முதலீடு செய்தார். அதில் நிதிசேமிப்பு வாரிசாக சசிகலாவைத்தான் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் சசிகலாவே தம்முடைய வாரிசு என அன்றே ஜெயலலிதா அறிவித்துவிட்டார். அதற்கான ஆவணமே இது.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் ஒருமனதாக சசிகலாவை பொதுச்செயலராக அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+