ஜெயலலிதா சொத்து ரத்த உறவுகளுக்கே சொந்தம்.. இந்து என்.ராம்
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ரத்த உறவுகளுக்கே சொந்தம் என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் சொத்து அவரது ரத்த சொந்தங்களுக்கு தான் சொந்தம் என மூத்த பத்திரிகையாளரான இந்து என்.ராம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் சசிகலா. இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் இந்து ராம். அரசியல் சாசனத்துக்கு அப்பாலான சக்திகள் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடாது என ராம் கூறியிருந்தார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவை அக்கட்சி நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கும் இந்து ராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும், அதை நம்பி குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவான ஓர் ஏற்பாடாக முடியும் எனவும் எச்சரித்திருந்தார் இந்து ராம். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென போயஸ் கார்டனுக்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.
If Jayalalithaa died intestate, i.e., left no will, her properties will, by law, go to her surviving blood relatives -- her niece & nephew. https://t.co/H4JieHD2Fy
— N. Ram (@nramind) December 16, 2016
இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொத்து அவரது ரத்த உறவுகளுக்கு தான் சொந்தம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்து ராம்.