69-வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் முதல்வர் ஜெ. கொடி ஏற்றினார்... 10 நிமிடம் மட்டுமே உரை!
சென்னை: நாட்டின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அப்துல்கலாம் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நாட்டின் சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
முதலில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களின் நினைவிடமான சென்னை கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஜெயலலிதா.
போர் நினைவுச் சின்னத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையின் நுழைவு வாயிலை காலை 8.45 மணியளவில் வந்தடைந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வரவேற்றார்.
இதன்பின், முப்படைகளின் தென் பிராந்தியத் தலைவர்கள், தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்வருக்கு மரபுப்படி அறிமுகம் செய்து வைத்தார் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன்.
இதன் பின் முப்படையினரின் மற்றும் காவல் துறையினரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு கோட்டை கொத்தளத்துக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து பல்வேறு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இஸ்ரோ திட்ட இயக்குநர் வளர்மத்திக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
உட்கார்ந்தபடியே...

சட்டசபையிலும் பொதுக்கூட்டங்களிலும் நின்றபடி உரையாற்றும் முதல்வர் ஜெயலலிதா இன்று நாற்காலியில் உட்கார்ந்தபடியே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications