அயோத்தி பிரச்னையில் மத்தியஸ்தராக பேச்சுவார்த்தை நடத்திய ஜெயேந்திரர்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியவர் ஜெயேந்திரர்.
Recommended Video

காஞ்சிபுரம் : அயோத்தியில் இருந்த ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி பிரச்னைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர். சில முறைகள் இவர் மத்தியஸ்தராக இருந்து இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால் இவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதிக்கு இடையிலான பிரச்சினை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அயோத்தி பிரச்னை எழுந்தது முதலே நீதிமன்றத்திற்கு வெளியே இந்தப் பிரச்னை குறித்து கலந்து ஆலோசித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ஜெயேந்திரர்.

இந்து அமைப்புளுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஜெயேந்திரர் முயற்சி செய்தார். இதற்காக கடந்த சனிக்கிழமை லக்னோவுக்கு சென்ற அவர், அங்குள்ள முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்காக 2011ம் ஆண்டில் புனேவில் நான் இமாம்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் அயோத்தி பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம். பின்னர் தொல்லியல் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்த முடியாத நிலை உள்ளது. இங்கு தொழுகை நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்று அப்போது பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் உடன்பட்டு ஏற்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்றதால் பேச்சுவார்ததை பலனில்லாமல் போனது.
இதே போன்று 2014ம் ஆண்டில் ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரர்களான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் காலீத் ரஷீத் பிராங்கி மஹெலியுடன் ஜெயேந்திரர் முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார். மூடிய கதவுகளுக்குள் இருவருக்கும் இடையே சுமார் ஒருமணி நேரம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற சமரச பேச்சு வார்த்தையில் ஜெயேந்திரர் ஈடுபடுவது முதன்முறை அல்ல. ஏற்கெனவே அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் தலைவராக இருந்த மவுலானா ரப்பே ஹசன் நத்வீயுடன் மார்ச் 2002-ல் பேச்சுவார்த்தை நடத்தினார். இது சுமார் ஒரு வருடத்துக்கு தொடர்ந்த போதிலும் ஜெயேந்திரரால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சி மீண்டும் தோல்வி அடைந்தது.
தன்னுடைய மடாதிபதிக்கான பொறுப்புகளுக்கு இருக்கும் சட்டங்களைக் கடந்து ஜெயேந்திரர் அயோத்தி பிரச்னையில் தலையீடு செய்தார் என்று பாஜகவினர் பெருமையாகச் சொல்கின்றனர். சாதி, மதங்களைக் கடந்து மக்கள் நலனுக்காக அக்கறையோடு செயல்பட்டவர் ஜெயேந்திரர் என்றும் அவரின் வழிபாட்டாளர்கள் கூறுகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications