ரூ.10 கோடி மோசடி புகார்.. சென்னையில் பிரபல நகைக்கடை அதிபர் கைது
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மோசடி வழக்கில் பிரபல நகை கடை அதிபர் கைது
சென்னை: விளம்பர நிறுவனத்திடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல நகைக்கடை அதிபர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடைகளில் ஒன்று கே.ஃஎப்.ஜே. இதன் அதிபர் சுனில் செரியன். இவர் விளம்பர நிறுவனத்திடம் ரூ. 10 கோடி மோசடி செய்ததாக அந்த விளம்பர நிறுவனம் புகாரில் சுனில் செரியன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications